×

துடியலூர் அருகே மகன் திட்டியதால் தாய் மாயம்

பெ.நா.பாளையம்., ஜன.8: கோவை அருகே மகன் திட்டயதால் விரக்தியடைந்த தாய் மாயம். துடியலூர்  லட்சுமி நகர் ஸ்டேட் பேங்காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயனி (48) இவர் கடந்த 27 வருடங்களாக  கணவரை பிரிந்து தனது மகன் முத்துகுமார்  மகள் சத்யாவுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
மகளுக்கு கடந்த 2  வாருடத்திற்கு முன்பு திருமணம் ஆகி சோமனூரில் கணவருடன் உள்ளார்.  மகன்  சரவணம்பட்டியில் உள்ள தனியார் கம்பெனியில் இரவு நேரம் தங்கி வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கார்த்திகேயனி வீட்டில் துணி துவைத்தார். அப்போது பக்கத்து வீட்டு பெண்ணுக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து பக்கத்து வீட்டு பெண் கார்த்திகேயனின் மகனுக்கு போன் செய்து அவரது தாய் மீது புகார் கூறினார். இதனையடுத்து முத்துகுமார்  தனது தாய்க்கு போன் செய்து தாயை கண்டித்தார்.  

எல்லோரும் என்னை மட்டுமே குறை சொல்லுங்கள் என்று கார்த்திகேயனி தனது செல்போனை கட் செய்தார்.  இதையடுத்து மீண்டும் அவர் தாய்க்கு போன் செய்தார். நீண்ட நேரம் முயற்றும் அவர் போனை எடுக்கவில்லை. சந்தேகம் அடைந்த மகன் இது குறித்து தனது சித்தப்பா மவுலிக்கு போன் செய்து வீட்டிற்கு சென்று தாயை பார்க்குமாறு கூறினார். அவர் அங்கு சென்று பார்த்தபோது கார்த்திகேயனி அங்கு இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள், தோழிகள் வீடுகளை தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடிவயில்லை. இதனையடுத்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கார்த்திகேயனியை தேடி வருகிறார்கள்.

Tags : Tudiyalur ,
× RELATED தோப்பில் 800 கிலோ பாக்கு திருடிய 2 பேர் கைது