×

மண்ணூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மண்ணூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மண்ணூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் அறிவுச்செல்வன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் சரவணன் வரவேற்றார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி, துணை தலைவர் விஜயலட்சுமி சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் ஊராட்சியில் சாலை வசதி, சிறுபாலம் அமைத்தல், மயான சாலை அமைத்தல், புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல்உள்படபல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த தீர்மானங்கள் பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டன. இதில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Grama Niladhari ,Mannur ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அருகே நாட்டு...