பட்டுக்கோட்டை, ஜன.8: பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திட்டக்குடி ஊராட்சி செயலாளராக இருப்பவர் கவுரி (32). இவர் நேற்று திட்டக்குடி ஊராட்சி அலுவலகத்தில் பணியில் இருக்கும் போது அதே திட்டக்குடி ஊராட்சியை சேர்ந்தவர் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் எனக்கு வீடு கொடுக்கப்படவில்லை என்று கூறி தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது தாக்குதலை தடுக்க சென்ற தூய்மை காவலர் ஜெயராணியையும் திட்டி தாக்கியும் இருவரையும் அரசு பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார்.