×

புதுக்கோட்டையில் மின் வாரிய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கோட்டை, ஜன.8: மின் வாரிய அலுவலகத்தில் வருவாய் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தவர், திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை-அரிமளம் சாலையில் வசித்து வந்தவர் சபரிராஜ் (47). இவர் புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் வருவாய் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று பகலில் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்த சபரிராஜ் திடீரென அவரது அறைக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த சபரிராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். இவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து புதுக்கோட்டை நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Pudukottai ,
× RELATED மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்