×

நிலம் அடமானம் வைத்ததில் தகராறு பெண்ணை தாக்கிய 7 பேர் மீது வழக்கு

தா.பழூர்,ஜன.8: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கோவிந்தபுத்தூர் குமணந்துறை பகுதியை சேர்ந்தவர் வசந்தா. புரந்தான் பகுதியை சேர்ந்தவர் ரவி என்பவரிடம் வசந்தா தனது விவசாய நிலத்தின் பேரில்கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ரவி தனது பணத்தை திருப்பி தரும்படியும் வசந்தாவிடம் கேட்டுள்ளார். அப்படி பணத்தை தர முடியவில்லையென்றால் நிலத்தை எழுதி தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரவிக்கும், வசந்தாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த ரவி மற்றும் அவரது உறவினர்களான நேரு, மகாதேவன், வேலரசி, ராஜாங்கம், சுந்தரமூர்த்தி, சுப்புராயன். ஆகியோரும் அங்கு வந்துள்ளனர்.

இதில் வாய் தகராறு முற்றி பின்பு அனைவரும் சேர்ந்து வசந்தாவை திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் வசந்தா அளித்த புகாரின் பேரில் ரவி, நேரு, மகாதேவன் , வேலரசி, ராஜாங்கம், சுந்தரமூர்த்தி, சுப்புராயன் உள்ளிட்ட 7 பேர் மீது விக்கிரமங்கலம் சப்.இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags :
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா