×

கொரோனா தடுப்பு குறித்து வீ.கே.புதூரில் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்

சுரண்டை, ஜன.8: வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் தாசில்தார் பட்டமுத்து தலைமையில் நடந்தது. தலைமையிடத்து துணை தாசில்தார் முருகன், மண்டல துணை தாசில்தார் சீனிபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீ.கே.புதூர் வருவாய் ஆய்வாளர் ராஜாத்தி வரவேற்றார்.  கூட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் செய்ய வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாஸ்க் அணிய வேண்டியதின் அவசியம், சானிடைசர் பயன்படுத்துதல், தனிமனித இடைவெளி, ஒமிக்கிரான் பரவலை தடுக்க அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறை கடைபிடித்தல் குறித்து தாசில்தார் பட்டமுத்து விளக்கினர். மேலும்‌நோய் தடுப்பு நடவடிக்கையில் வியாபாரிகளின் பங்கு முக்கியமானது.

வாடிக்கையாளர்களை முககவசம் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வியாபாரிகள் அறிவுறுத்த வேண்டும் என தாசில்தார் வேண்டுகோள் விடுத்தார். கூட்டத்தில் வீராணம் ஊராட்சி மன்ற தலைவர் வீரபாண்டியன், சுரண்டை வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜ், பொருளாளர் தனபால், நிர்வாக குழு உறுப்பினர் ரமேஷ், செய்தி தொடர்பாளர் ராஜ்குமார், மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ஏகேஎஸ் சேர்மசெல்வம், செயலாளர் ஏ.ஜி.கணேசன், வெற்றிவேல், முருகன், வீ.கே.புதூர் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மதன்ராஜ், தவசி, ஆறுமுகம், முருகன், மரியலூயிஸ் பாண்டியன், சங்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ‌

Tags : VK ,Puthur ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிடும்: வி.கே.சசிகலா