×

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

சாத்தூர்: சாத்தூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் உத்தரவின்படியும், சாத்தூர் காவல் துணை கண்ணிப்பாளர் நாகராஜன் ஆலோசனையின்படியும் சாத்தூர் நகர் காவல்நிலையம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. சாத்தூர் காவல் ஆய்வாளர் செல்லபாண்டியன், காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கொரோனா, ஒமைக்ரான் தொற்று தடுப்பு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து பொது வெளியில் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் கொரோனா தடுப்பூசி அனைவரும் கட்டாயம் போட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. இதில் சாத்தூர் பகுதி ஆட்டோ மற்றும் கார் ஓட்டுனர்கள் பலர் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.

Tags : Corona Prevention Awareness Seminar ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு