×

புதுகை ஒன்றிய அலுவலகத்தில் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் மாரடைப்பால் சாவு

புதுக்கோட்டை, ஜன. 7: புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தங்கியிருந்த உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (56). மாற்றுத் திறனாளியான இவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு புதுக்கோட்டை மகளிர் திட்ட அலுவலகத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டார். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டப் பணிகள் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓரு அறையில் தங்கி பணிசெய்து வந்த நிலையில் நேற்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அமர்ந்திருந்த நாற்காலியிலேயே மயங்கி விழுந்துள்ளார். உடன் வேலைபார்த்து வந்த அலுவலர்கள், அவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் முன்பே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து நகர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Assistant Regional Development Officer ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு