×

மயிலாடுதுறையில் பைக்கிலிருந்த ரூ.1.40 லட்சத்தை திருடிய ஆந்திர ஆசாமி கைது

மயிலாடுதுறை ஜன.7: மயிலாடுதுறையில் வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்ற முதியவரின் கவனத்தை திசைதிருப்பி ரூ.1.40 லட்சத்தை திருடிச் சென்ற ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நபரை மயிலாடுதுறை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாருதி நகரை சேர்ந்தவர் கண்ணப்பன்(75). இவர் கடந்த மாதம் 28ம் தேதி வங்கியொன்றில் ரூ.1.40 லட்சம் பணம் எடுத்துக்கொண்டு வீடு திரும்பும்போது, பின்தொடர்ந்த மர்ம நபர்கள் அவரது கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து, கண்ணப்பன் மயிலாடுதுறை போலீசில் அளித்த புகாரின்பேரில், எஸ்ஐ இளையராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு தேடிவந்தனர்.

இந்நிலையில், மயிலாடுதுறை பேருந்து நிலையம் பகுதியில் நின்றிருந்த வாகனத்தில் வைத்திருந்த பணத்தை திருட முயன்ற நபரைக்கண்ட பொதுமக்கள் அந்த நபரைப் பிடித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரியைச் சேர்ந்த ஜெகதீஷ்(38) என்பதும், அவர் கண்ணப்பனின் பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, ஜெகதீஷிடமிருந்து திருடப்பட்ட பணத்தை மீட்ட போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக மேலும் 3 நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Andhra Asami ,Mayiladuthurai ,
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...