×

சாத்தூரில் பொங்கல் பரிசு தொகுப்பு: அமைச்சர் துவக்கி வைத்தார்

சாத்தூர்: அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், கரும்பு,நெய் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், சாத்தூர் தென்வடல் புதுத்தெரு பகுதி ரேசன் கடைகளில் பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எம்எல்.ஏ ரகுராமன், ஊராட்சி ஒன்றிய சேர்மன் நிர்மலா கடற்கரைராஜ், வட்டாட்சியர் சீதாலட்சுமி, வருவாய்த்துறை அதிகாரிகள், கூட்டுறவுத்துறை அதிகாரிகள், திமுக நகர செயலாளர் குருசாமி, ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு முருகேசன்,மேற்கு கடற்கரைராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Pongal ,Minister ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா