×

போதமலைக்கு சாலை வசதி

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க, புதிய குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், போதமலைக்கு சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும் என ராஜேஷ்குமார் எம்.பி., தெரிவித்தார். ராசிபுரம் பகுதியில், ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி., ஆகியோர் கலந்துகொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினர். பின்னர் ராஜேஷ்குமார் எம்.பி., பேசுகையில், ‘ராசிபுரம் நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க, ஓராண்டிற்குள் ₹1300 கோடி மதிப்பீட்டில் புதிதாக குடிநீர் திட்டப்பணிகள் அமைக்கப்படும். மேலும், போதமலையில் வசிக்கும் மக்களுக்காக சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும்,’ என்றார்.

ெதாடர்ந்து அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், ‘நகைகடன் தள்ளுபடியில் அதிமுகவினர் பல்வேறு குளறுபடிகளில் ஈடுபட்டு, போலியான நகைகளை கூட்டுறவு வங்கிகளில் வைத்து கடன் பெற்றுள்ளனர். இதன் மீது முழுமையாக விசாரணை நடத்தி, உரிய பயனாளிகளுக்கு 5 சவரன் வைத்துள்ளவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி உரிய நேரத்தில் செய்து தரப்படும்,’ என்றார். முன்னாள் எம்பி சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், துரைசாமி, பாலச்சந்தர், நல்லதம்பி, ராஜேஷ், ஜெயக்குமார், ராமசாமி, பாலு, ராம்குமார், கார்த்தி, சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Bodhamalai ,
× RELATED ராசிபுரம் போதமலையில் உள்ள 1,142...