×

தஞ்சையில் 5 வயது பெண் குழந்தையிடம் இரு சிறுவர்கள் 3 மாதமாக பாலியல் தொந்தரவு புகார் வாங்க போலீசார் மறுத்ததாக தாய் குற்றச்சாட்டு

தஞ்சை, ஜன.6: தஞ்சையில் தனது ஐந்து வயது பெண் குழந்தையிடம் 10 மற்றும் 11 வயதை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் கடந்த 3 மாதமாக தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கொடுக்க சென்ற தாயிடம் புகாரை வாங்க போலீசார் மறுப்பு தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தஞ்சாவூர் தொம்பன் குடிசை அருகே, சோழன் நகரை சேர்ந்த எலக்ட்ரிஷியன் மனைவி மேற்கண்டவாறு குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்த விபரம் வருமாறு: இந்த தம்பதி காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த தம்பதி வசிக்கும் பகுதியை சேர்ந்த 10 மற்றும் 11 வயதுடைய, இரண்டு சிறுவர்கள் அந்த பெண் குழந்தைக்கு கடந்த 3 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். தற்போது தான் அந்த குழந்தையின் தாய்க்கு விஷயம் தெரிய வந்துள்ளது. அதற்கு முன்பு அந்த குழந்தை பெண்ணுறுப்பு வலிப்பதாக தெரிவித்துள்ளார்.

 விளையாடும் போது அடிப்பட்டு இருக்கும் என்று தாய் நினைத்துள்ளார். பின்னர் அவரது மகன் சிறுவர்களின் பாலியல் தொல்லையை கண்டு தனது தங்கையை அடித்துள்ளான். அப்போது விசாரித்த போது நடந்த சம்பவங்கள் தம்பதிக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அந்த சிறுவர்களின் பெற்றோரிடம் கூறிய போது, உள்ளூர் அரசியல் பிரமுகர்களை வைத்து தன்னையும், தனது கணவனையும் மிரட்டியதாகவும், மேலும் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றபோது, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல், தன்னை கேவலமாக நடத்தியதாகவும், சமாதானமாகப் போகும்படி அறிவுறுத்துகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட தனது மகளுக்கு உரிய நியாயம் வேண்டும், அந்த சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, சிறுவர்கள் காப்பகத்தில் அடைக்க வேண்டும்.அவர்களை சிறுவர் காப்பகத்தில் வைத்து உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என அந்த பெண் குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்துள்ளார்.

Tags : Thanjavur ,
× RELATED தஞ்சாவூரில் பட்டப்பகலில் பரபரப்பு...