×

மதுக்கூர் வட்டாரத்தில் 50 % மானியத்தில் விவசாயிகளுக்கு தார்பாய் வழங்கல்

பட்டுக்கோட்டை, ஜன.6:தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் வட்டாரத்தில் மாநில திட்டத்தின்கீழ் தார்பாலின் வழங்கிட இலக்கு அளிக்கப்பட்டு35 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. 8க்கு 6அடி அளவுள்ள தார்பாய் விலை ரூ.4 ஆயிரத்து 200.50 சத மானியம் ரூ.2 ஆயிரத்து 100. ஜி.எஸ்.டியுடன் ரூ.2 ஆயிரத்து 856 விவசாயிகள் பங்கு தொகை பெற்றுக்கொண்டு உழவன் செயலியில் பதிவு செய்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டது. நேற்று மதுக்கூர் வட்டாரம், வாட்டாகுடி ஊராட்சியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மதுக்கூர் வேளாண் உதவி இயக்குநர் திலகவதி, வேளாண் அலுவலர் சாந்தி மற்றும் வேளாண் உதவி அலுவலர் கார்த்தி ஆகியோர் விவசாயிகளுக்கு வழங்கினர்.

Tags : Madukkur ,
× RELATED பட்டுக்கோட்டை, மதுக்கூரில் நடந்த...