×

ஆண்-3,86,077 காரைக்காலில் 13 பேருக்கு கொரோனா தொற்று

காரைக்கால், ஜன.6: காரைக்காலில் நேற்று 13 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் அரசு பொது மருத்துவமனை மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 4ம் தேதியன்று 558 பேர்களிடமிருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்ததில் 13 பேர்களுக்கு (திருநள்ளாறு-6, காரைக்கால்-2, நிரவி-2, நெடுங்காடு-1, கோவில்பத்து-1, வரிச்சிக்குடி-1) கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 16 ஆயிரத்து 892 பேர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 16 ஆயிரத்து 576 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்றுடன் 260 பேர் மரணமடைந்துள்ளனர். 56 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 17 பேர் பொது சிகிச்சை பிரிவிலும், ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவிலும், மீதி 38 பேர் வீட்டு தனிமையிலும் உள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதுவரை 1 லட்சத்து 23 ஆயிரத்து 274 பேர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 86 ஆயிரத்து 804 பேர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் (மொத்தம் 2,10,078) செலுத்தப்பட்டுள்ளது. அதுபோன்று 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 880 சிறுவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags :
× RELATED மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்