- பஞ்சாயத்து செயலாளர்கள் சங்கம்
- கீழ் வெலியூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
தோகைமலை, ஜன. 6: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கல்லடை ஊராட்சி கீழவெளியூரில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் தோகைமலை ஒன்றிய கிளை சார்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் நேசமணி தலைமை வகித்தார். ஒன்றிய பொருளாளர் செந்தில்குமார், நிர்வாகிகள் கலியராஜா, மணிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில துணை செயலாளர் வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.இதில் கோரிக்கைகளை ஏற்று அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படியினை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்க அரசாணை பிறப்பித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தல், சங்கத்தின் பெயரில் புதிய வங்கி கணக்கு துவங்குதல், மாநில மைய சங்க கட்டிடம் அமைப்பதற்கு நிதி வழங்குதல், சங்கத்தின் தேகைமலை ஒன்றிய தலைவராக மோகன்ராஜை தேர்வு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் முருகானந்தம், ரவிச்சந்திரன், பாலமுத்து தினேஷ், ரமேஷ், மற்றொரு ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.