×

புன்னம் சத்திரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து 3 பவுன் செயின் அபேஸ்


வேலாயுதம்பாளையம், ஜன. 6: புன்னம் சத்திரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் ஜோதிடம் பார்ப்பதாக கூறி பார்ப்பதாக கூறி மயக்க மருந்து கொடுத்து 3 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். ஒடிசா மாநிலம் பிரம்பப்பூர் பகுதியை சேர்ந்தவர் பொன்ஷா. இவரது மகன் ராஜேஷ்( 30). இவரது மனைவி சுமித்ரா( 25). இவர்கள் தற்போது கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே கைலாசபுரத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். ராஜேஷ் புன்னம் சத்திரம் அருகே உள்ள கல்குவாரியில் பொக்லின் இயந்திர டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சுமித்ரா வீட்டில் தனியாக இருந்தபோது அப்பகுதிக்கு இரண்டு மர்ம நபர்கள் பைக்கில் வந்துள்ளனர்.பைக்கை ஓட்டி வந்த நபர் பின்னால் அமர்ந்திருந்தவரை இறக்கி விட்டு மறைவிடத்திற்கு சென்று விட்டார் . பைக்கில் இருந்து இறங்கிய நபர் சுமித்ரா குடியிருந்த வீட்டிற்கு சென்று தான் ஜோதிடர் என்றும், ஜோதிடம் சொல்ல வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அந்தப் பெண் தான் ஜோதிடம் பார்க்க வில்லை என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டுக்குள் சென்ற அந்த நபர் சுமித்ராவிற்கு மயக்கம் அடையும் வகையில் ஏதோ கொடுத்து அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு வெளியே வந்து அங்கு மறைவிடத்தில் தயாராக நின்று கொண்டிருந்தவரின் பைக்கில் ஏறி இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து ராஜேஷ் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமித்ராவை மயக்கமடைய வைத்து 3 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற 2 மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chain Abbey ,Punnam Inn ,
× RELATED திருவள்ளூர் அருகே மூதாட்டியிடம் செயின் அபேஸ்: மர்ம நபர்களுக்கு வலை