×

மண்மங்கலம் அருகே கார் மோதி கூலி தொழிலாளி பலி

வேலாயுதம்பாளையம், ஜன. 5: மண்மங்கலம் அருகே சியாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராம்( 65), டெக்ஸ் கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் சேங்கல்மலை வழியாக தளவாபாளையம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது கரூரில் உள்ள ஒரு கார் ஷோரூமில் பணிபுரியும் தோட்டக்குறிச்சி ஆதிதிராவிட தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன்(35) என்பவர் சோதனைக்காக ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக ஜெயராம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags : Manmangalam ,
× RELATED தேர்தல் அதிகாரியை திட்டிய அதிமுக மாஜி அமைச்சர் மீது வழக்கு