×

வருசநாடு மலைக்கிராமங்களில் குடியிருப்பு கணக்கெடுக்கும் பணி தீவிரம்

வருசநாடு: வருசநாடு அருகே, மலைக்கிராமங்களில் குடியிருப்புகளை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வருசநாடு அருகே அரசரடி, பொம்மராஜபுரம், இந்திரா நகர், குழிக்காடு, நொச்சி ஒடை, ஐந்தரைப் புலி, வெள்ளிமலை ஆகிய மலைக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் உள்ள வீடுகளை கணக்கெடுக்கும் பணி மற்றும் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை கணக்கெடுக்கும் பணி ஆகியவை தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியின்போது தோட்டக்கலை துணை இயக்குனர், அலுவலக உதவியாளர்கள் முரளி, முகமது சிந்தா, ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஞானகுருதேவன், மூங்கில் டிரஸ்ட் இயக்குனர் வேலுச்சாமி, சமூக ஆர்வலர் வேல்முருகன், வருசநாடு வனக்காப்பாளர் இன்பலாதன், வனக்காவலர் தினேஷ் மற்றும் வனத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘கணக்கெடுக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு வழங்கியுள்ளது. மலைக்கிராமங்களில் எத்தனை குடும்பங்கள் உள்ளன; சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களின் விபரம் ஆகியவற்றை கணக்கிட்டு வருகிறோம்’ என தெரிவித்தனர்.

Tags : Varusanadu ,
× RELATED கடமலை அருகே கிணறு பைப்லைனை சேதப்படுத்திய யானைகள்