×

15 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்த அனுமதி: எஸ்பியிடம் மனு

ராமநாதபுரம்:  திருப்புல்லாணி அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தி வைத்த பொக்கனாரேந்தல் சாத்துடையார் அய்யனார் கோயில் ஜல்லிக்கட்டு விழாவை மீண்டும் நடத்த அனுமதி கோரி எஸ்பியிடம் ராமநாதபுரம் மாவட்ட ஜல்லிக்கட்டு, எருதுகட்டு, வடமாடு உரிமையாளர்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் மனு அளித்தார்.

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சி பொக்கனாரேந்தல் சாத்துடையார் அய்யனார் கோயில் ஜல்லிக்கட்டு விழா கோயிலுக்கு பாத்தியப்பட்ட அனைத்து கிராமங்கள் சார்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்து நடைபெற்று வந்தது. நீதிமன்றதடை விதிப்பால் விழா நிறுத்தி வைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு விழாவிற்கான தடையை நீக்கி கட்டுப்பாடுகளுடன் கூடிய உத்தரவை உச்சநீதிமன்றம் வழங்கியதன் பேரில் கோயிலுக்கு பாத்தியப்பட்ட பொக்கனாரேந்தல், பள்ளபச்சேரி, தாதனேந்தல், முத்துவீரப்பன்வலசை, கைக்கோளர்மடம், திருப்புல்லாணி, பால்கரை, ஆர்.எஸ்.மடை, வீரன்வலசை, கோவிந்தனேந்தல், அம்மன்கோவில், அச்சடிபிரம்பு, குமுக்கோட்டை, ஆனைகுடி, சிவஞானபுரம், களரி, ராமநாதபுரம் இந்திரா நகர், திருப்புல்லாணி இந்திராநகர், கே.கொடிக்குளம் கங்கைகொண்டான், வெண்குளம், வன்னிக்குடி, வித்தானூர், வள்ளிமாடன்வலசை,ஆர்.காவனூர், சுமைதாங்கி, சீதக்காதி நகர், உத்தரவை, சேதுக்கரை, மோர்க்குளம் கிராம பொறுப்பாளர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு, எருதுகட்டு, வடமாடு, உரிமையாளர்கள் நலச்சங்க பொறுப்பாளர்கள் சார்பில் பிப்.16ல் ஜல்லிக்கட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோயில் ஜல்லிக்கட்டு விழாவை தமிழக அரசிதழில் வெளியிட வேண்டும். இந்த சமத்துவ ஜல்லிக்கட்டு விழாவை தமிழக அரசின் வழிகாட்டல் நெறிமுறைகள், உச்ச நீதிமன்ற வழிகாட்டல் படி நடத்துவோம்.

விழாவிற்கு காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமை ஏற்று நடத்தவும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு மாநில தலைவர் ராஜசேகரன் ஜல்லிக்கட்டு, எருதுகட்டு, வடமாடு உரிமையாளர்கள் நலச்சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவர் சுந்தரராஜ் ஆகியோர் வழிநடத்தவும் உள்ளனர். ஜல்லிக்கட்டு விழாவிற்கு அனுமதி வழங்கி விழாவில் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags : SP ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்