×

கிருஷ்ணகிரி, பர்கூரில் சேர்க்கை முகாம் ஒரேநாளில் 2 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மற்றும் பர்கூரில் நடந்த திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்களில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் உறுப்பினர்களாக தங்களை இணைத்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் கிருஷ்ணகிரி மற்றும் பர்கூரில் நடந்த முகாம்களில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான செங்குட்டுவன் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்ட மகளிரணி சார்பில் கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையில் உள்ள நகர திமுக அலுவலகம் முன்பு கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நகர செயலாளர் நவாப், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பரிதா நவாப் முன்னிலையில் திமுகவில் உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.

வாக்காளர் அட்டையில் உள்ள அவர்களது விவரங்களை பெற்று திமுக உறுப்பினர் படிவத்தில் கையெழுத்து பெறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தர்மன், கனல்சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல பர்கூர் ஒன்றிய திமுக மாணவரணி சார்பில் ஜெகதேவி கிராமத்தில் மாணவரணி அமைப்பாளர் ராஜ்(எ)ராஜதுரை தலைமையில் நடந்த முகாமில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் பர்கூர் எம்எல்ஏ மதியழகன் மற்றும் பர்கூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், கவுன்சிலர் அப்சர்பேகம், வேலுமணி, நெடுஞ்செழியன், சரவணன், வெற்றி, வல்லரசு, செந்தில், விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி அடுத்த கனகமுட்லு பகுதியில் நடைபெற்ற முகாமில் ஒன்றிய செயலாளர் கோவிந்தன் முன்னிலையில் 600க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்பியும், மாநில சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினருமான வெற்றிச்செல்வன், அஸ்லாம், பையம்மாள்முருகன், கோவிந்தராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரவணன், வேட்டியம்பட்டி மகேந்திரன், ராஜசேகர், குணசேகரன், சிவன், மாணிக்கம், மாதேஷ், மாது, பிரபு, ஆனந்தன், வெங்கடேசன், துரை, வெங்கட்டராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சேலம் சாலையில் உள்ள செட்டியம்பட்டி பகுதியில் நகர இளைஞரணி சார்பில் இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன் தலைமையில் நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் துணை அமைப்பாளர் மதன்குமார், மாணவரணி அமைப்பாளர் வேல்மணி, கண்ணன், ரமேஷ், புவியரசன், சுரேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Admission Camp ,Krishnagiri ,Bargur ,DMK ,
× RELATED வறட்சியால் பாதிக்கப்பட்ட மாமரங்கள் கணக்கெடுப்பு