தேன்கனிக்கோட்டை: ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த பொன்ராஜ் மகன் அதிசயநாதன் (28), ஓசூரில் தங்கியிருந்து அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். அதே தொழிற்சாலையில் வேலூரை சேர்ந்த வீரப்பன் மகன் அஜித் (24) என்பவரும் பணியாற்றி வருகிறார். நண்பர்களான இவர்கள் கடந்த 2ம் தேதி, அஞ்செட்டி அருகே மஞ்சுகொண்டப்பள்ளி ஊராட்சி தப்பகுளி என்னுமிடத்திற்கு சென்று, காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற அதிசயநாதன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார்.