×

டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை

கிருஷ்ணகிரி: சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் தலைமையில், கிருஷ்ணகிரி கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வேப்பனஹள்ளி ஒன்றியம், சீலேப்பள்ளியில் அரசு மதுபானக்கடையும், சற்று தொலைவில் உள்ள கோடிப்பள்ளி ஊராட்சியில் ஒரு மதுபானக் கடையும் செயல்பட்டு வருகிறது. சீலேப்பள்ளியில், ஊரையொட்டியுள்ள மதுபானக்கடையில் மது வாங்கும் குடிமகன்கள், அங்கேயே குடித்து விட்டு, பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் பெண்களை கேலி செய்வதும், காலி மதுபான பாட்டில்களை உடைத்து அருகில் உள்ள விவசாய நிலத்தில் வீசுவதுமாக உள்ளனர். மேலும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, பெண்கள் நலன் கருதி, சீலேப்பள்ளியில் உள்ள அரசு மதுபானக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Tasmac ,
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்