×

கொசஸ்தலை ஆற்றில் மூழ்கிய 2 வாலிபர்களின் உடல் மீட்பு

சென்னை: மணலி புதுநகர் இடையன் சாவடி அருகே கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் நேற்று முன்தினம் காலை வியாசர்பாடியை சேர்ந்த 8 பேர் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களில் நிவாஸ் (22), எதிர்பாராதவிதமாக கொசஸ்தலை ஆற்றில் விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்தார். மேலும், உடனிருந்த அஜித் (21), ஆற்றில் குதித்து அவரை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரும் சிறிது நேரத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் வந்தவர்கள் உடனடியாக மணலி புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் மூலம் தகவல் அறிந்த மணலி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அஜித், நிவாஸ் இருவரையும் தேடினர். ஆனாலும் எங்கும் கிடைக்கவில்லை. இரவு நேரமாகிவிட்டதால் டார்ச் லைட்டை கொண்டு தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனாலும் அவர்கள் கிடைக்கவில்லை.

இந்நிலையில், தீயணைப்பு நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமையில் நேற்று விடியற்காலை முதல் மீண்டும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இருவரையும் தேடினர். அப்போது அஜித்தின் உடலை மீட்டனர். தொடர்ந்து பிற்பகல் நிவாஸின் உடலையும் மீட்டனர். பின்னர் இருவரின் சடலங்களையும் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Kosasthalai river ,
× RELATED எண்ணூரில் கச்சா எண்ணெய் கழிவில்...