திருச்சி, ஜன.4: திருச்சி அருகே பா.காட்டூரில் நடந்த சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமில் 904 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. திருச்சி கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் திருவெறும்பூர் ஒன்றியம் பா.காட்டூர் கால்நடை மருந்தகத்திற்குட்பட்ட சோழமாதேவி கிராம ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. திருச்சி கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் எஸ்தர் ஷீலா தலைமை வகித்தார். திருச்சி உதவி இயக்குநர் டாக்டர் மருதைராஜு, திருச்சி, கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் டாக்டர் சுகுமார் மற்றும் திருவெறும்பூர், கால்நடை மருத்துவர் சந்துரு ஆகியோர் கலந்துகொண்டனர்.
சோழமாதேவி ஊராட்சி தலைவர் முருகானந்தம் முகாமினை தொடங்கி வைத்தார்.