×

ராஜபாளையம் பகுதியில் பயிரிட்ட சில மாதங்களிலேயே கரும்பு பூத்ததால் விவசாயிகள் பாதிப்பு

ராஜபாளையம், ஜன. 3: ராஜபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிட்ட கரும்பு பூத்ததால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராஜபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல், கரும்பு, தென்னை என விவசாயிகள் பெருமளவில் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பெய்த தொடர் மழை காரணமாக நெற்பயிர்கள் அதிக அளவு பயிரிட்டுள்ளனர். மேலும் ஒரு சில பகுதிகளில் கரும்பு நடவு செய்த சில மாதங்களிலேயே பூ பூத்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘தற்போது பெய்த தொடர் மழை காரணமாக மழைநீர் விவசாய நிலங்களில் தேங்கி கிடைப்பதால் கரும்பு பயிரிட்ட சில மாதங்களில் பூ பூத்தது கரும்பு வளர்ச்சி இல்லாமல் போய்விடுகிறது இதனால் கரும்பு விவசாயிகள் கடும் நஷ்டத்தை தள்ளப்பட்டு உள்ளதாகவும் ஆகவே இது குறித்து வேளாண் துறை சார்பில் கணக்கிட்டு கரும்பு விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!