×

அனுமன் ஜெயந்தி விழா

திருப்புத்தூர், ஜன.3: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திருப்புத்தூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள மேலக்கோட்டை ஸ்ரீ வீரஆஞ்சநேயர் கோயிலில் நேற்று காலையில் ஆஞ்சநேயருக்கு பால், சந்தனம், தயிர், மஞ்சள் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் வீர ஆஞ்சநேயர் சுவாமி வெள்ளி கவசத்தில் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை ஆஞ்சநேயர் வெண்ணெய்க்காப்பு அலங்காரத்திலும் காட்சியளித்தார். உற்சவர் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமிக்கு துளசி மாலை அணிவித்தும், அர்ச்சனை செய்தும் வழிபாடு செய்தனர்.

பக்தர்களுக்கு புளி சாதம், கேசரி, வடை, பால் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாக்குழுவினர் செய்திருந்தனர். இரவு 7 மணியளவில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெற்றது. இதே போன்று திருப்புத்தூர் ­ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் அமைந்துள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று காலையில் ஆஞ்சநேயருக்கு பலவிதமான அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags : Hanuman Jayanti Festival ,
× RELATED அனுமன் ஜெயந்தி விழா