×

உச்சிப்புளி, திருப்புல்லாணி வட்டார விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரம், ஜன.3: உச்சிப்புளி, திருப்புல்லாணி வட்டார விவசாயிகள், உழவர் நண்பர்கள் குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. உச்சிப்புளி வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டத்திற்கு மண்டபம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் தலைமை வகித்தார். வட்டார அட்மா சேர்மன் தௌபிக் அலி முன்னிலை வகித்தார். வேளாண் உதவி இயக்குநர் அமர்லால் வரவேற்றார். கால்நடை உதவி டாக்டர் நிஜாமுதீன் பேசினார். மாவட்ட கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன் ராமவன்னி, கவிதா கதிரேசன், அரசு வழக்கறிஞர் முனியசாமி, உதவி விதை அலுவலர் ஆனந்த், உதவி வேளாண் அலுவலர் உதயா, உதவி தோட்டக்கலை அலுவலர் ஐயப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

உதவி தொழில்நுட்ப மேலாளர் முருகானந்தம் ஏற்பாடு செய்திருந்தார். உச்சிப்புளி வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரெங்கநாதன் நன்றி கூறினார்.திருப்புல்லாணி வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன் தலைமையில் நடந்தது. இரண்டாம் போக சாகுபடி, சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உர பயன்பாடு குறித்து ராமநாதபுரம் வேளாண் துணை இயக்குநர் ஷேக் அப்துல்லா பேசினார். திருப்புல்லாணி உதவி கால்நடை டாக்டர் ஜெயபிரகாஷ், ராமநாதபுரம் மீன்வளத்துறை மேற்பார்வையாளர் நடேஷ்பிரபு, ராமநாதபுரம் வேளாண் பொறியியல் துறை இளநிலை செயற்பொறியாளர் ராமர், வேளாண் வணிக அலுவலர் பாலமுருகன், தோட்டக்கலை உதவி அலுவலர் மதன் உள்பட பலர் பங்கேற்றனர்.  வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி நன்றி கூறினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் மாரீஸ்வரன் ஏற்பாடு செய்திருந்தார்.

Tags : Uchchipulli ,Thirupullani ,Regional Farmers ,
× RELATED பதநீர் சீசனால் கருப்பட்டி தயாரிப்பு பணி துவக்கம்