×

ராமநாதபுரத்தில் கனமழை

ராமநாதபுரம், ஜன.3: ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நீண்ட நேரம் மழை நீடித்ததால் இயல்பு வாழ்க்கை பாதித்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக லேசானது முதல் கன மழை பெய்து வருகிறது.  கடலோர மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில், ராமநாதபுரம், உச்சிப்புளி, வேதாளை, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை பெய்தது. சுமார் 4 மணி நேரம் நீடித்த மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

Tags : Ramanathapuram ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...