×

இறைநிலை விளக்க பயிற்சி

நெல்லை, ஜன. 3: நெல்லை தாமிரபரணி அறிவுத்திருக்கோயில் சார்பில் இறைநிலை விளக்கப் பயிற்சி முகாம் நடந்தது. உலக சமுதாய சேவா சங்க திருநெல்வேலி மண்டலம் சார்பில் நெல்லை பேட்டையிலுள்ள தாமிரபரணி அறிவுத்திருக்கோயிலில் இறைநிலை விளக்கப் பயிற்சி முகாம் நடந்தது.  ஆழியார் ஸ்மார்ட் துணைத்தலைவர் பேராசிரியை லீலாவதி இறைவணக்கம், துரிய தவம் நடத்தினார். ஆழியார் மைய முதுநிலைப்பேராசிரியர் முனைவர் பெருமாள், பிரம்மஞான விளக்கம், வானியலும் சோதிடமும், இறைநிலை விளக்கம் குறித்து விளக்கிப் பேசினார். ஆறுமுகம் நன்றி கூறினார். இதில் நெல்லை சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED கட்டிட மேஸ்திரி வீட்டில் 10 கிராம் நகை திருட்டு