×

நெல்லிக்குப்பத்தில் சிவ விஷ்ணு பஜன் ஊர்வலம்

நெல்லிக்குப்பம், ஜன. 3:   நெல்லிக்குப்பத்தில் உள்ள புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோயில் மற்றும் அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமி கோயிலில் 20ம் ஆண்டு தனூர் மாத சிவ விஷ்ணு பஜன் ஊர்வலம் நடந்தது. இதை முன்னிட்டு கோயிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் ரிஷப வாகனத்தில் சிவன், கருட வாகனத்தில் பெருமாள் ஆகியோர் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பஜனை பாடல்களுடன் பஜன் ஊர்வலம் நடந்தது. நெல்லிக்குப்பம் பூலோகநநாதர் கோயிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோயில், வாழப்பட்டு விருத்தகிரீஸ்வரர் கோயில் வரை சென்றது. சிவனும், பெருமாளும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Tags : Shiva ,Vishnu Bhajan ,Nellikuppam ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...