திருவண்ணாமலை, ஜன.3: திருவண்ணாமலை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த 15 வயது கர்ப்பிணி சிறுமி மருத்துவமனைக்கு சென்றபோது மாயமானதால், புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி, இவருக்கு கடந்த 4 மாதமங்களுக்கு முன்பு திருமணம் நடந்து, கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை அலுவலர், சிறுமி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குழு ஆணையம் கடந்த மாதம் 9ம் தேதி சிறுமியின் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், ரகசியமாக குழந்தை திருமணம் நடந்ததும், தற்போது அந்த சிறுமி 4 மாதம் கர்ப்பிணியாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் சிறுமியை மீட்டு பெரும்பாக்கம் சாலையில் உள்ள பெண் குழந்தைகள் வரவேற்பு மையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.