×

குமுளி அருகே மாயமான சிறுவன் பிணமாக மீட்பு துக்கத்தை விசாரிக்க சென்றபோது சோகம்

கூடலூர், ஜன. 1: கூடலூர் அருகே, குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். இவரது மனைவி தங்கம். இவர்களது மகன் மிலன் (3). இந்நிலையில், நேற்று முன்தினம் தினேஷ்குமார் தனது மனைவி, மகனுடன் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே, சாஸ்தாநடையில் உள்ள உறவினர் வீட்டு துக்கநிகழ்வில் கலந்து கொள்ள சென்றார். அன்று மாலை துக்கவீட்டிலிருந்த சிறுவன் மிலனை காணவில்லை. இது குறித்து சிறுவனின் உறவினர்கள் குமுளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் குமுளி போலீசாரும், உறவினர்களும், பொதுமக்களும் இரவு முழுவதும் தேடியும் சிறுவனை காணவில்லை. நேற்று காலை வீடு அருகே உள்ள குளத்தில் சிறுவன் இறந்த நிலையில் மிதந்தது தெரிய வந்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kumuli ,
× RELATED குமுளியில் குடியிருப்பு பகுதியில்...