×

திருமங்கலம், கள்ளிக்குடி தாலுகாக்களுக்கு பொங்கல் பொருள்கள் அனுப்பும் பணி தீவிரம்

திருமங்கலம், ஜன.1: தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையொட்டி 21 பொங்கல் பொருள்கள் இந்தாண்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொருள்கள் தற்போது சென்னை, ஈரோடு, உதகமண்டலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அந்தந்த மாவட்ட தலைநகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி தாலுகாக்களுக்கு திருமங்கலத்திலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கிலிருந்து கடந்த இரண்டு தினங்களாக லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாக 48 ஆயிரம் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அரிசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட 16 வகை பொருள்கள் நுகர்பொருள் வாணிபகிடங்கிலிருந்தும், கரும்பு, முந்திரி, ஏலக்காய்  உள்ளிட்ட பொருள்கள் கூட்டுறவுத்துறை மூலமாகவும் தாலுகாக்களில் உள்ள அனைத்து ரேஷன்கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று முன்தினம் திருமங்கலம் நகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கும் நேற்று திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி தாலுகாக்களில் உள்ள ரேஷன்கடைகளுக்கும் தமிழக அரசின் பொங்கல் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

Tags : Thirumangalam ,Kallikudi talukas ,
× RELATED திருமங்கலம் பகுதியில்...