பவானி: பவானி வடக்கு ஒன்றிய திமுக செயற்குழுக் கூட்டம் பொறுப்புக் குழு உறுப்பினர் பாலு தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்டத் துணைச் செயலாளர்கள் அறிவானந்தம், கீதா நடராஜன், பொறுப்புக் குழு உறுப்பினர்கள் தட்சிணாமூர்த்தி, ஒரிச்சேரி தங்கமணி, சந்திரசேகரன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சத்தியமூர்த்தி, ஜம்பை பேரூர் செயலாளர் ஆனந்தகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் சதீஷ்குமார், சரோஜா திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியப் பொறுப்பாளர் மகேந்திரன் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் கலந்து கொண்டு மாவட்டச் செயலாளர் நல்லசிவம் பேசுகையில், ‘‘கட்சியின் வளர்ச்சிக்கு அதிகளவில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கருத்து வேறுபாடுகளை மறந்து, ஈரோடு வடக்கு மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 20 பேரூராட்சிகளிலும் திமுக வெல்லும் வகையில் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். பொங்கல் திருநாளில் அனைத்து கிளைகளும் கட்சி கொடியேற்றி, பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாட வேண்டும்’’ என்று கூறினார்.
மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் தங்கவேல், மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் கனகா சக்திவேல், கூட்டுறவு சங்கத் தலைவர் சித்தையன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் அன்பழகன், தலைமைக் கழகப் பேச்சாளர் பவானி கண்ணன், ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் செங்கமலம் ராஜேந்திரன், பருவாச்சி பரணீதரன், நிர்வாகிகள் ஜெயஸ்ரீ இளையராஜா, பருவாச்சி ரவி, பெரியபுலியூர் ரமேஷ், பாறை செல்வம், ஜெகதீஷ், தனபாக்கியம் முத்துசாமி, கல்பனா கந்தசாமி, முனிராஜ், மாரசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கட்சியில் இணைந்த ஜம்பை, புன்னம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.