×

ஆலங்குளம், கடையத்தில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆலங்குளம், டிச. 31:  ஆலங்குளம், கடையத்தில் மஞ்சப்பை விநியோகத்தை திமுக மருத்துவர் அணி மாநில தலைவர் பூங்கோதை துவக்கி வைத்தார். பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில், சமீபத்தில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மஞ்சப்பை வழங்கும் பணியை திமுகவினர் மேற்கொண்டு உள்ளனர். இதேபோல் ஆலங்குளத்தில் பொதுமக்களிடம் மஞ்சப்பை விநியோகத்தை திமுக மருத்துவர் அணி மாநில தலைவர் பூங்கோதை தொடங்கி வைத்தார். மக்காத பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தாதீர்கள். அதனால் புற்றுநோய் போன்ற பயங்கர நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவருடன் பொதுக்குழு உறுப்பினர் பாப்புலர் செல்லத்துரை, பாப்பாக்குடி வட்டார இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் சிவக்குமார், முன்னாள் ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் மாஞ்சோலை துரை, 2வது வார்டு கிளை செயலாளர் அய்யாதுரை, ஒன்றிய விவசாய அணி செயலாளர் கணபதி பாண்டியன், கிளை பிரதிநிதிகள் அந்தோணி, வடிவேல் முருகன், கிளை செயலாளர் மாரித்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கடையத்தில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சியை பூங்கோதை தொடங்கி வைத்து பொதுமக்கள், வியாபாரிகளிடம் மஞ்சப்பையை விநியோகித்தார். இதில் மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் சேர்மச்செல்வன், கீழக்கடையம் ஊராட்சி தலைவர் பூமிநாத், துணை தலைவர் துரைசிங், ராசுகுட்டி, தங்கராஜா,  பாலையா, ஆட்டோ ராசுகுட்டி, எம்ஜிஆர் ரமேஷ், இன்பென்ட், சுப்புக்குட்டி, தினேஷ், ரமேஷ், ஜெகன், சரஸ்வதி, தேவநேசன், சங்கர், அடைச்சாணி முத்துசாமி, சங்கிலிபூதத்தார், கோதர் அலி, விஸ்வா சேக், மாரி, இசக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Alangulam ,Kadayam ,
× RELATED கடையம் அருகே சோளத்தட்டையில் பதுங்கிய ராட்சத மலைப்பாம்புகள்