×

அனுமன் சேனா கட்சி வலியுறுத்தல் ஒரத்தநாடு அருகே வயலில் நிறுத்திய டிராக்டர் திருட்டு

ஒரத்தநாடு,டிச.31: ஒரத்தநாடு அருகே வயலில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு தெற்கு தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (52). தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான டிராக்டரை தனது மண்டலக்கோட்டை சாலையிலுள்ள தனது சொந்த வயலில் நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் வயலில் போடப்பட்டிருந்த இரும்பு கேட்டை உடைத்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை திருடி சென்றுள்ளனர். வழக்கம்போல் அதிகாலையில் வயலுக்கு சென்ற குணசேகரன் தனது வயலில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக குணசேகரன் ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் டிராக்டரை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Hanuman Sena ,Orathanadu ,
× RELATED ஒரத்தநாட்டில் தீ தொண்டு நாள், வார...