×

கோட்டைப்பட்டினம் கடற்கரையில் விதிகளைமீறி மீன் பிடித்த விசைப்படகு மீது வழக்கு

அறந்தாங்கி, டிச.31: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கடற்கரையோரத்தில் விதிகளை மீறி மீன் பிடித்ததாக ஒரு விசைப்படகு மீது வழக்குப்பதிவு செய்து வலைகளை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் பகுதியில் விசைப்படகு மீனவர்கள் கரையோரத்தில் மீன் பிடிப்பதாக மீன்வளத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நேற்று மீன்வள உதவி இயக்குனர் சின்னகுப்பன் மற்றும் அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒரு விசைப்படகு கரையோரத்தில் மீன் பிடித்ததை அடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் கரையில் மீன்பிடித்த விசைப்படகு மீது வழக்குப்பதிவு செய்ததுடன் மீன் பிடிக்க பயன்படுத்திய வலைகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags : Kottaipattinam ,
× RELATED இலங்கை தாக்குதலினால் இறந்த 4 மீனவர்கள்...