×

புத்தாண்டை முன்னிட்டு பெரம்பலுாரில் அஸ்வின்ஸின் 3 நாள் கேக் திருவிழா

பெரம்பலூர்,டிச.31: பெரம்பலூரில் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் சார்பில், ஆங்கில புத்தாண்டையொட்டி 3 நாட்கள் கேக் திருவிழா துவங்கியது. நாளை (1ம் தேதி) வரை பெரம்பலுார் புதிய பேருந்து நிலையம் எதிரேயுள்ள அஸ்வின்ஸ் பார்ட்டி ஹாலில் கேக் திருவிழா நடக்கிறது. இதில், நூற்றுக்காணக்கான மாடல்களில் மல்டி கலரில் கேக்குகளை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர். இந்தாண்டுக்கான ஆங்கில புத்தாண்டு நாளை பிறக்க உள்ளது. இந்த 2022ம் ஆண்டு பிறப்பையொட்டி, பெரம்பலுாரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் கேக் திருவிழா நடத்த திட்டமிட்டது. இதன்படி, இந்த கேக் திருவிழா நேற்று (30ம் தேதி), இன்று (31ம் தேதி) மற்றும் நாளை (ஜன 1-ம் தேதி) ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது. இதனை, அஸ்வின்ஸ் குழும தலைவர் கேஆர்வி.கணேசன் குத்துவிளக்கேற்றி கேக் திருவிழாவை துவக்கி வைத்தார். முதல்விற்பனையை வள்ளலார் அரவிந்தன் தொடங்கிவைக்க, ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் செயலர் விவேகானந்தன் பெற்றுக்கொண்டார்.

இதில், கொரோனா விழிப்புணர்வு கேக்குகள், துாய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான கேக்குகள் மற்றும் சாக்கோடிரபுல், ரெட்வெல்வெட், ரிச்ப்ளம் கேக், மோல்டு கேக், ஸ்டாபெர்ரி, நெய்கேக், கோதுமை கேக், பீட்ரூட்கேக், பிளாக்கரண்ட் கேக், சாக்லெட் கேக், மெல்டிஸ் கேக் பிளாக்பாரஸ்ட், ஒயிட் பாரஸ்ட், ஜாக்கோரபுல், ரெயின்போ, நெட்வெல்வெட், புளுபெரி, ஸ்டாபெரி, பட்டர்ஸ்காச், பிளாக்கன்னெட், ஜாக்லெட், வெண்ணிலா, ஹனிகேக் டரிச்பிளைன்கேக், மோல்ட்டு, பொக்கே, பிளைன் கேக் உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான கேக்குகள், மல்டி கலரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கேக் திருவிழாவில் பார்வையாளர்களின் விருப்பத்திற்கேற்ப கேக்குகள் உடனுக்குடன் தயாரித்து தரப்பட்டது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த கேக்திருவிழா துவக்கவிழாவில் பெரம்பலூர்நகரின் முக்கியபிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Aswins' ,festival ,Perambalur ,
× RELATED எசனை காட்டு மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா