×

மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் பரபரப்பு திமுக- அதிமுக கவுன்சிலர்கள் காரசார விவாதம்

கரூர், டிச. 31: கரூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஊராட்சி குழுவின் சாதாரண கூட்டம் கலெக்டர் அலுவலக பின்புறம் உள்ள மாவட்ட ஊராட்சி குழு அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. ஊராட்சி குழுத் தலைவர் கண்ணதாசன் தலைமை வகித்தார். ஊராட்சி குழு செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதில், திமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் ஐந்து பேரும், அதிமுக உறுப்பினர்கள் ஆறு பேரும் கலந்து கொண்டனர். மூன்று தீர்மானங்கள் கொண்ட பொருட்களின் அடிப்படையில் இந்த சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்ட தீர்மானம் 2 மற்றும் 3 குறித்து திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 2 மற்றும் 3 ஆகிய தீர்மானங்கள் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டது. மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு மணி நேரம் நடந்த இந்த சாதாரண கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றுவது சம்பந்தமாக இரண்டு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் மாறி மாறி பேசிக் கொண்டதால் சிறிது நேரம் கூட்டரங்கில் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : DMK-AIADMK ,
× RELATED 2ம் இடத்தில் இருந்து 8ம் இடத்துக்கு ...