×

திருக்காம்புலியூர் வழியாக செல்லும் பாசன வாய்க்கால் தடுப்பு சுவர் உடைந்து சேதத்தால் அபாயம்

கரூர், டிச. 31: கரூர் திருக்காம்புலியூர் குடியிருப்பு வழியாக செல்லும் பாசன வாய்க்கால் தடுப்பு சுவர் உடைந்துள்ளதை சரி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் கோவை மற்றும் ஈரோடு சாலைகள் சந்திக்கும் பகுதியில் திருக்காம்புலியூர் குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்த குடியிருப்பு வழியாக பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த பாசன வாய்க்காலில் சிறிது தூரம் தடுப்புச் சுவர் உடைந்த நிலையில் உள்ளது. இதன் வழியாக தினமும் ஏராளமானோர் இரண்டு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். எனவே, இந்த பகுதியினர் நலன் கருதி உடைந்த நிலையில் உள்ள தடுப்புச் சுவரை சீரமைக்க வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Thirukambuliyur ,
× RELATED திருக்காம்புலியூர் கிராமத்தில்...