×

ரங்கம் கோயில் உண்டியல்கள் திறப்பு ரூ.89 லட்சம், 26 பவுன் தங்கம், வெள்ளி பக்தர்கள் காணிக்கை

திருச்சி, டிச. 30: ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஒவ்வொரு மாதம் இறுதியில் பக்தர்கள் உண்டியலில் அளிக்கும் ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவை திறந்து எண்ணப்படும். அதுபோல் நேற்று ரங்கம் கோயிலில் கருடாழ்வார் சன்னதியில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் திருவானைக்காவல் உதவி ஆணையர் மாரியப்பன், ஆய்வாளர் பாஸ்கரன், மேலாளர் உமா பார்வையில் கோயில் பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உண்டியலை எண்ணினர். இதில் பக்தர்கள் காணிக்கையாக ரொக்கம் 89 லட்சத்து 13 ஆயிரத்து 913, தங்கம் 165 கிராம், வெள்ளி 1164 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சி 149 ஆகிய இருந்தது. மேலும் கூடுதலாக ஏகாதசி திருவிழாவிற்காக கோயிலில் வைக்கப்பட்ட உண்டியலில் ரொக்கம் ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 210 காணிக்கையாக இருந்தது. கடந்தமாதம் காணிக்கையைவிட இந்த மாதம் 36 லட்சம் கூடுதலாக கிடைத்துள்ளது.

Tags : Aurangzeb ,Temple Bills ,
× RELATED திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு சீர்வரிசை வழங்கிய ரங்கம் ரங்கநாதர்