×

திருச்சி கலெக்டர் விளக்கம் மத்திய சிறை உள்பட 3 சிறைகளில் அமைச்சு பணியாளர்களுக்கு சாப்பாட்டு அறை சிறைத்துறை டிஐஜி திறந்து வைத்தார்

திருச்சி, டிச. 30: திருச்சி மத்திய சிறை உள்பட 3 சிறைகளில் அமைச்சு பணியாளர்களுக்கான சாப்பாட்டு அறையை சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி நேற்று திறந்து வைத்தார். திருச்சி மத்திய சிறை, காந்தி மார்க்கெட் மகளிர் சிறை மற்றும் புதுக்கோட்டையில் உள்ள பார்ஸ்டல் பள்ளி ஆகிய சிறைகளில் பணியில் உள்ள அமைச்சு பணியாளர்கள் அமர்ந்து உணவு சாப்பிடும் வகையில் அறை தேவை என வெகு நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து இந்த 3 சிறைகளிலும் அமைச்சு பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்று உணவு அருந்தும் கூடம் கட்டி முடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து 3 சிறைகளிலும் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட உணவு அருந்தும் கூடத்தை திருச்சி சரக சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி நேற்று திறந்து வைத்தார். அப்போது திருச்சி சிறை சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் மகளி்ர் சிறை கண்காணிப்பாளர், புதுக்கோட்டை மாவட்ட பார்ஸ்டல் பள்ளி கண்காணிப்பாளர் உடனிருந்தனர்.

Tags : DIG ,Department of Prisons ,Central Jail ,
× RELATED சேலம் சிறையில் டிஐஜி ஆய்வு