×

ஒமிக்ரான் பரவலை தடுக்க பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும்

கடலூர், டிச. 30: கடலூர் மாவட்ட எஸ்பி சக்திகணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உலகம் முழுவதும் வரும் 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஒமிக்ரான் நோய் தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு விதித்துள்ள கட்டுபாடுகளை பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு பெற்றோர்கள் தங்கள் குடும்ப இளைஞர்களிடம் அறிவுறுத்த வேண்டும். புத்தாண்டை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களான தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரை, பிச்சாவரம், பூங்காக்கள் ஆகிய இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனங்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கு குந்தகம் விளைவிக்கும் விதத்திலும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் அதிவேகமாக வாகனம் ஓட்டினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். 2022ம் ஆண்டு புத்தாண்டை பாதுகாப்பானதாகவும், மகிழ்ச்சியுடனும் பொதுமக்கள் அனைவரும் கொண்டாட கடலூர் மாவட்ட காவல்துறை மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது, என தெரிவித்துள்ளார்.

Tags : New Year ,Omigron ,
× RELATED மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்