×

மாணவிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 16 மாதம் சிறை நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

நெல்லை,டிச.28:  நெல்லை சந்திப்பு கருப்பந்துறையை சேர்ந்தவர் பீர்முகம்மது (42) கூலி தொழிலாளி. இவர் நெல்லையை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்லும் போது பின்தொடர்ந்து சென்று திருமணம் செய்து கொள்ள கூறி பாலியல் தொந்தரவு செய்தார். இந்நிலையில் பீர்முகம்மது கடந்த 2019ம் ஆண்டு ஜன.6ம் தேதி மாணவியின் வீட்டிற்கு சென்று, அவரது தந்தையிடம் மகளை திருணம் செய்துவைக்க கூறி பிரச்னையில் ஈடுபட்டார்.
இதுகுறித்து மாணவியின் தந்தை டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து பீர்முகம்மதுவை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. வழக்கை போக்சோ நீதிபதி அன்பு செல்வி விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட கூலி தொழிலாளி பீர்முகம்மதுக்கு 16 மாத சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜெபஜீவ ராஜா ஆஜரானார்.

Tags : Pokோmon ,Nellie ,
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...