×

நாகுடி பகுதிகளில் அரசு ஒப்பந்ததாரர் கட்டுமான பொருட்கள் கடைக்கு தீ வைப்பு

அறந்தாங்கி,டிச.28: நாகுடி பகுதியில் அரசு ஒப்பந்ததாரர் கட்டுமான பொருட்கள் கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் ரூ.1 லட்சம் பொருட்கள் சேதமானது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மேல்மங்கலம் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். அரசு ஒப்பந்தகாரர். இவர் நாகுடி பகுதியில் கட்டுமான பொருட்கள் கடை மற்றும் அலுவலகம் நடுத்தி வருகிறார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் மர்ம நபர்களால் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த சென்ட்ரிங் பலகை மற்றும் கம்புகளை தீ வைத்து எரித்துள்ளனர். பின்பு அருகில் இருந்த டிராக்டர் வாகனத்திலும் தீ வைத்துவிட்டு தப்பி சென்றனர். தீயைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அதிச்சி அடைந்து உடனே தீயை அணைக்க போராடினர். ஆனால் டிராக்டரின் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான டையர் மற்றும் ஓயர்கள் பலத்த சேதம் அடைந்தது. மேலும், ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான சென்ட்ரிங் பலகை மற்றும் கம்புகளும் முற்றிலும் எரிந்து நாசமாகி விட்டது. இந்த சம்பவம் அறிந்த நாகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Nagudi ,
× RELATED அறந்தாங்கி அருகே மக்களை அச்சுறுத்தும் உடைந்த மின்கம்பம்