×

கரூரில் ஆண் சடலம் மீட்பு

கரூர், டிச. 28: கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாக பகுதியில் 50வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக உதவி மருத்துவ அலுவலர் ஒருவர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு சென்ற பசுபதிபாளையம் போலீசார், இறந்து கிடந்தவரை மீட்டு மார்ச்சுவரிக்கு அனுப்பி வைத்து, இறந்து கிடந்தவர் யார்? என்பது குறித்தும், எப்படி இறந்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Karur ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்