×

சிறுமிக்கு பாலியல் தொல்லை டெய்லருக்கு ஆயுள் தண்டனை

திருப்பூர், டிச. 28:  திருப்பூரில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டெய்லருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருப்பூரில் கடந்த 2020 ம் ஆண்டு குமரானந்தபுரத்தை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் திருப்பூர் குமாரனந்தபுரம் பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன டெய்லர் செல்வம் (50) என்பவரை வடக்கு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுகந்தி, சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்த செல்வத்திற்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். பின்னர் போலீசார் செல்வத்தை கோவை மத்திய சிறையிலடைத்தனர்.

Tags : Taylor ,
× RELATED டெய்லர் தூக்கிட்டு தற்கொலை