திருவில்லிபுத்தூர், டிச. 27: திருவில்லிபுத்தூர் சி.எஸ்.ஐ தூய தோமா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் மர விழா நடைபெற்றது. குருசேகர தலைவர் மற்றும் சபை குரு அருள்திரு பால்தினகரன் தலைமையில் இந்த விழா நடந்தது. அனாயா கிஷோன் சிறப்பு பாடல் பாடினார். இதில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.