×

அருப்புக்கோட்டை அருகே வேட்டையாடப்பட்ட முயல், காடைகள் மீட்பு

திருவில்லிபுத்தூர், டிச. 27: விருதுநகரில் உள்ள வனப்பாதுகாப்பு படை அதிகாரி மணிவண்ணன் உத்தரவின் பேரில், பாரஸ்டர் செந்தில் ராகவன் தலைமையில், அருப்புக்கோட்டை கல்குறிச்சி பதவியில் நேற்று அதிகாலை நேரத்தில் சோதனை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, தோணுகால் அருகே வந்த டூவீலரை நிறுத்தி சோதனை செய்த போது, தோணுகால் அருகே உள்ள வக்கனாங்குண்டைச் சேர்ந்த போஸ் (58) என்பவர் 10 காடை மற்றும் 3 முயல்களை வேட்டையாடி
 கொண்டு வருவது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அவரிடம் இருந்து முயல் மற்றும் காடைகளை உயிருடன் மீட்டு விருதுநகர் வனப் பாதுகாப்பு படை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், வேட்டைக்கு பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர். மேலும், போஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்க வத்திராயிருப்பு வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வத்திராயிருப்பு வனத்துறையினர் விசாரணைநடத்தி வருகின்றனர்.

Tags : Aruppukkottai ,
× RELATED அருப்புக்கோட்டை காந்திநகர் பஸ்...