×

கோவை செழியன் பிறந்தநாளை முன்னிட்டு கொமதேக சார்பில் ரத்த தானம்

திருப்பூர்,டிச.27: கொங்கு வேளாள கவுண்டர் பேரவை நிறுவனர் கோவை செழியனின் 91-வது பிறந்தநாளை முன்னிட்டு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் கொங்கு ரத்ததான மையம் கிழக்கு மண்டலத்தின் சார்பில் ரத்ததான முகாம், மற்றும் பொதுமருத்துவ முகாம் திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள குலாளர் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ரோபோ ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கிழக்கு மண்டல செயலாளர் விஜயசாரதி வரவேற்றார், கொங்கு பண்பாட்டு மைய தலைவர் எஸ்.ஆர்.குமார், மாநகர தலைவர் சுரேஷ்குமார், மாநகர பொருளாளர் வேலுமணி, மாநகர மாவட்ட துணை செயலாளர் தம்பி வெங்கடாசலம், வர்த்தகரணி செயலாளர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், கொமதேக மாநில பொருளாளர் கே.கே.சி.பாலு, மாநில இளைஞரணி செயலாளர் சூர்யமூர்த்தி, திருப்பூர் ஒருங்கிணைந்த  மாவட்ட விவசாய அணி  செயலாளர் தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண், காது, மூக்கு, தொண்டை, பொதுமருத்துவம் ஆகியவைகளில் இலவச பரிசோதனை செய்து கொண்டனர். ரத்த தான முகாமை எம்எல்ஏ செல்வராஜ் தொடங்கி வைத்தார். இதில் திமுக பொறுப்பாளர்கள் டி.கே.டி.மு. நாகராசன்,தினேஷ்குமார், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சி வடக்கு மாநகர செயலாளர் பி.ஆர்.கணேசன், மதிமுக மாவட்ட செயலாளர் நாகராஜ், பார்வர்ட் பிளாக் கட்சி மாநில துணை தலைவர் கர்ணன், கொமதேக மண்டல செயலாளர்கள் வேலுசாமி, பொன்னுசாமி, கனகராஜ், கிழக்கு மண்டல தலைவர் கோவிந்தராஜ், பொருளாளர் லோகநாதன், இளைஞரணி செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 205 யூனிட் ரத்தம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.நிகழ்ச்சியை மாநகர இளைஞரணி செயலாளர் செல்வராஜ் ஒருங்கிணைத்தார்.

Tags : Komadeka ,Coimbatore ,Chezhiyan ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...